மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேர் முன்கூட்டியே விடுதலையானதில் ஆவணங்களை தாக்கல் செய்து, உள்துறை அலுவலர்கள் நேரில் ஆஜராகக் கூறிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி., அரசு அலுவலர்கள் ஆஜராகி இருந்தனர். கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
சிறைத்துறை அலுவலர்கள் ஆஜராகி 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். இந்த அரசாணையை எதிர்த்து தாமாகவே முன்வந்து நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு வழக்காக எடுத்து விசாரித்தனர்.