தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 13, 2019, 9:25 PM IST

ETV Bharat / state

மதுரை கண்மாயில் கொட்டப்பட்ட 20 டன் மருத்துவக் கழிவுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

மதுரை: கருப்பாயூரணி வீரபாஞ்சன் கிராமத்திலுள்ள கண்மாயில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, அப்பகுதி மக்கள் பொதுப் பணித்துறையினரின் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.

Medical waste dumped in Veerapanchan

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த மழையால் வீரபாஞ்சன் கிராம கண்மாய் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்தக் கண்மாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் ஏறக்குறைய 20 டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நிரம்பியுள்ள கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகளை, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் உதவியோடு அகற்றி வருகின்றனர்.

மருத்துவக் கழிவுகளை டிராக்டர் மூலம் அள்ளும் பொதுப்பணித்துறையினர்

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பொதுப்பணித்துறையினர், இதுபோன்று கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:வாக்கு எந்திரங்களை சேமிக்கும் கிடங்குகள் அமைக்க ரூ.120.87 கோடி நிதி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details