தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சுவிரட்டுக்கு அனுமதி மறுப்பு - வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி இல்லை

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி இல்லை
வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி இல்லை

By

Published : Dec 11, 2021, 8:28 AM IST

மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று (டிசம்பர் 10) மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "அஜய் வாண்டையார் நற்பணி மன்றம் சார்பில் நாளை (டிசம்பர் 11) மதுரை விமான நிலைய சாலையில் உள்ள நிலையூர் மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்தவுள்ளோம்.

இதற்கு அனுமதி கேட்டு ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். ஆனால் கரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி விழாவுக்கு அனுமதி தர காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி விழா நடத்தப்படும். எனவே, வடமாடு மஞ்சு விரட்டு விழா, நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், அனைத்து கரோனா கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, வடமாடு மஞ்சுவிரட்டு அனுமதி வழங்க முடியாது. நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களைக் கொண்டு நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு

ABOUT THE AUTHOR

...view details