மதுரை மாவட்டம் நிலையூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுரையில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது!
மதுரை: நிலையூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனைசெய்த நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து 239 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டன.
கைதான கதிரவன்
இதனையடுத்து நிலையூர் பகுதியில் ரோந்துப் பணிக்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த கதிரவன் என்ற நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க:ஓசி சிகரெட் தராத டீ கடைக்கு தீ வைப்பு!