தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டாஸ்மாக் ஊழியர்

மதுரை: அனுப்பானடி அருகே மதுக்கடை ஊழியர் நள்ளிரவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அனுப்பானடி

By

Published : May 2, 2019, 9:11 AM IST

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜா. இவர் அனுப்பானடி பகுதியில் உள்ள மதுக்கடையில் வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் பின்புறம் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாஸ்மாக் ஊழியர் மரணம்

மோகன் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்த காவல்துறையினர், இது கொலையா? அல்லது விபத்தா? என சந்தேக வழக்காக பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details