தமிழ்நாடு

tamil nadu

ரயில் நிலையம் முன்பு தேவர் சமூகத்தினர் போராட்டம்

மதுரை: விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி ரயிலை மறிக்க முயன்ற 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

By

Published : Mar 15, 2019, 5:07 PM IST

Published : Mar 15, 2019, 5:07 PM IST

போராட்டம்

மதுரையில் தேவர் சமுகத்தை சார்ந்த பலர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .


இதையடுத்து இன்று மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை தேவர் சமூகத்தினர் மறிக்க போவதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில் நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து ரயிலை மறிக்க முயன்ற தேவர் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்பினரை காவல்துறையினர் நுழைவு வாயிலிலேயே மறித்தனர். இதில் காவல் துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


ABOUT THE AUTHOR

...view details