தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2023, 10:48 AM IST

ETV Bharat / state

மதுரையில் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் - வைரலாகும் வீடியோ

மதுரையில் உள்ள பொதுப்பணித்துறையின் கட்டடப் பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ்குமார் ஒப்பந்த பணிக்காக ரூ.50 ஆயிரம் லஞ்சமாகப் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது நடவடிக்கை
லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது நடவடிக்கை

வைரலாகும் வீடியோ

மதுரை பொதுப்பணித்துறையின் கட்டடப்பிரிவில் செயற்பொறியளராகப் பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார். இவர் தேனி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொறியாளராகப் பணியாற்றி உள்ளார். இதனிடையே மதுரை பென்னிகுக் பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டடப்பிரிவின் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கழிப்பறை கட்டுவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.6.50 லட்சத்துக்கான ஒப்பந்தப் பணி ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு செயற்பொறியாளர் ரமேஷ்குமார் வற்புறுத்திய நிலையில், ரூ.50 ஆயிரம் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இந்த லஞ்சம் பெறப்பட்டபோது வீடியோவாக பாதிக்கப்பட்டவர் பதிவு செய்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் ஒப்பந்ததாரரிடம் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனையடுத்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரையடுத்து ரமேஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கி கொண்டு கடத்தல் கும்பலை விட்ட 4 காவலர்கள் சஸ்பெண்ட்

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், 'பொறியாளர் ரமேஷ்குமார், தான் பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலும் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார். மதுரை மாநகரின் முக்கியப் பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பே அபார்ட்மெண்ட்டில் கோடிக்கணக்கான மதிப்புடைய வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.

மேலும் அவர் பெயரில் பல்வேறு இடங்களில் சொத்துக்களும் உள்ளன. இவற்றையெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்' என்றார். முன்னதாக, திருவண்ணாமலையில் தற்காலிக மின் இணைப்பு கோரியவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் ரேணு என்பவர் கைது செய்யப்பட்டார். போர்மேன் ரேணு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் கேட்ட உடனேயே, இணைப்பு கோரிய வரதன் விஜிலென்ஸ் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.

இதன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வரதனிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அதை போர்மேன் ரேணுவிடம் கொடுக்கும் படி தெரிவித்தனர். இதனடிப்படையில் வரதன் ரேணுவிடம் பணத்தை கொடுக்க சென்றுள்ளார். அவருடன் சென்ற லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மறைந்திருந்த கண்காணித்தனர். அப்போது, லஞ்சம் கொடுக்கும்போது போது கையும் களவுமாக ரேணு மாட்டிக்கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இதுபோல தமிழ்நாடு முழுவதும் லஞ்சம் கேட்கும் நிலை நீடிக்கிறது.

மக்களும் லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர். இதுமுற்றிலும் தவறு அரசு சார்பான பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் யாரும் கொடுத்துவிட கூடாது, தயாங்கமல் லஞ்ச ஒழிப்பு துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துளளது.

இதையும் படிங்க:"மகன் விட்டுச் சென்ற திட்டங்களை செயல்படுத்துவேன்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ABOUT THE AUTHOR

...view details