கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் பிறப்பித்துள்ள நிலையில், அதனை முழுமையாக நிறைவேற்ற அரசு இயந்திரங்கள் பல்வேறு வகையிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒருகட்டமாக, மதுரை மாநகர காவல் துறையின் கண்காணிப்பிற்குட்பட்ட மதுரை நகர், திலகர் திடல், திருப்பரங்குன்றம், தல்லாகுளம், அண்ணாநகர் சரகங்களில் ட்ரோன்களை பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று காவல் ஆணையர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியிருந்தார்.