மதுரை கருப்பாயூரணி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம்(80) கோழி இறைச்சி கடை வியாபாரி. இந்நிலையில் காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்துல் ரஹீம் வீட்டின் அருகிலுள்ள பலசரக்கு கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே காவல் துறையினர் கூட்டமாக நிற்கக்கூடாது, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்று வலியுறுத்தினர். ஆனாலும் கூட்டத்தினர் கேட்கவில்லை.
அப்போது கடை வியாபாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அப்துல் ரஹீம் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருந்ததாக தெரிகிறது. எனவே காவல் துறையினர் கூட்டத்தை கலைக்க லேசாக தடியடி நடத்தியுள்ளனர்.