மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ் சுமார் 1.25 லட்சம் பேர் பல்வேறு படிப்புகளில் படிக்கின்றனர். பல இடங்களில் பல்கலைக்கழக மையங்கள் உள்ளன. சில ஆண்டுக்கு நடந்த தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளளன. ஒரு சில மையங்களில் தேர்வர்கள் அவரவர் இருப்பிடத்தில் இருந்தவாறு தேர்வெழுதியுள்ளனர். பல இடங்களில் இருந்து விடைத்தாள்கள் பல மாதங்களுக்கு பிறகே பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.