மதுரை : ஊரடங்கு காலத்தில் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த மதுரை மல்லிகை உள்ளிட்ட பிற மலர்களின் விலை, தற்போது பூக்களின் வரத்து குறைவு காரணமாக கணிசமான விலையேற்றத்தை சந்தித்துள்ளது.
விவசாய பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக மல்லிகை விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக கடும் விலை வீழ்ச்சியை மதுரை மல்லிகை சந்திக்க நேர்ந்தது.