தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடக்கம் - Madurai Jallikattu Vadivasal

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக, வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளன.

Jallikattu 2020
Madurai Jallikattu Vadivasal

By

Published : Jan 4, 2020, 2:32 PM IST

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் நடைபெறும். இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16ஆம் தேதி பாலமேட்டிலும் ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளன, ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானம் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான கேலரி அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளதால் பாலமேடு பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஜல்லிகட்டு காளைக்கு பயிற்சியளித்துவருகின்றனர்.

வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள்

சுமார் 700 காளைகள் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்கக் கூடிய வீரர்கள், காளைகள் தேர்வு வருகின்ற 8ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு இந்தாண்டும் காப்பீடு செய்யப்பட்டு களமிறக்கப்படுவார்கள் எனவும் பாலமேடு ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மோகினியாட்டம் ஆடிய நடனக் கலைஞர்கள்...

ABOUT THE AUTHOR

...view details