சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூரைச் சேர்ந்த அறிவழகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிவங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சாகூர் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டவர்கள்.
எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் ஆறு ஊரணிகள் உள்ளது. இந்த ஊரணிகளுக்கு வைகை நதியில் இருந்து மார்நாடு கண்மாய் வாய்க்கால் வழியாக நீர் வரும். இதனால், கிராமத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது. இந்நிலையில், முறையாக வாய்க்கால்களை அரசு பராமரிக்காததால் தற்போது வைகை அணையில் இருந்து விவசாயத்திற்கு இரண்டு முறை தண்ணீர் திறக்கப்பட்டும் ஊரணிகளுக்கு நீர் வந்து சேரவில்லை.
மேலும், எங்கள் பகுதியில் அதிகப்படியான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் ஊரணிகளுக்கு வரும் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கண்மாய்களை தூர்வார உத்தரவிட்டிருந்தது.