மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அழகரசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில், "சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா சோலார் எனர்ஜி என்கிற தனியார் நிறுவனம் வேளாண் நிலங்களை ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்லும் கால்வாய்களையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் உள்ள கால்நடை மேய்ச்சல், வேளாண் பணிகளுக்கு உள்ள நீர்ப்பிடிப்பு ஊரணியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர்ப்பிடிப்புகளை மீட்டுத்தரக் கோரி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.