தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழா, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி - நீதிமன்றம் உத்தரவு - மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி

மதுரை மாவட்டம் வெ.புதூரில் மஞ்சுவிரட்டு, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்தும் வழக்கம்போல் நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி
மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி

By

Published : Mar 25, 2022, 9:46 AM IST

மதுரை: மேலூர் வட்டம், மணப்பச்செரி கிராமத்தைச் சேர்ந்த காடப்பன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில், "மதுரை மாவட்டம், மணப்பசேரி கிராமம், வெ.புதூர் பகுதியிலுள்ள ஸ்ரீ முத்துபிடாரி அம்மன், ஸ்ரீ முடிமலையாண்டி, ஸ்ரீ வேப்பிலை கருப்பசாமி கோயில் சார்பாக பல ஆண்டுகளாக பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நடத்தி அன்று இரவே நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

எங்களது கிராமத்தின் அருகே பெரிய ஊர் எம்.வெள்ளாளபட்டியில் மஞ்சுவிரட்டு வைத்த மறு வாரத்தில் எங்கள் ஊரில் மஞ்சுவிரட்டு வைப்பது வழக்கம். இந்த சூழ்நிலையில் மார்ச் 18ஆம் தேதி பெரிய ஊர் எம்.வெள்ளாளப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்த உயர் நீதிமறைம் மதுரைக் கிளையில் அனுமதி அளித்துள்ளது.

எனவே, மணப்பசேரி கிராமம் வெ.புதூரில் வருகிற வெள்ளிக்கிழமை மார்ச் 25ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடத்தி அன்று இரவு நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு போட்டியில் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, மணப்பசேரி கிராமம், வெ.புதூரில் பாரம்பரிய பண்பாடு கருத்தில் கொண்டு மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மஞ்சுவிரட்டு நடத்தவும், அன்று இரவு நாடகம் நடத்தவும் அனுமதி அளிக்கவும், காவல் துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மஞ்சுவிரட்டு போட்டி உள்பட கோயில் திருவிழாக்கள் அனைத்தும் வழக்கம்போல் நடத்தலாம் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:அரசு பணியில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் : திருநங்கை தாட்சாயணி

ABOUT THE AUTHOR

...view details