மதுரை: அரசு அலுவலர்கள் வாரந்தோறும் புதன்கிழமைகளில் மிதிவண்டியில் வரவேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவிப்பு வெளியிட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 9) தன்னுடைய வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனீஷ் சேகர் மிதிவண்டியில் வந்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வாரத்தில் ஒருநாள் அனைத்து புதன்கிழமைகளிலும் அரசு அலுவலர்கள் மிதிவண்டியில் அலுவலகத்திற்கு வரவேண்டும்.