மதுரை சிம்மக்கல், கீழமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பலசரக்கு கடைகள், காய்கறிக்கடைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள கடைகளில் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சிறு வியாபாரிகள் வந்து பொருள்களை வாங்கிச் செல்வர். தற்போது ஊரடங்கு உத்தரவை ஓட்டி குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு காலையில் திறந்திருந்த பல கடைகளில், சமூக இடைவெளியில்லாமல் அதிகமானோர் கூடி பொருள்களை வாங்க முண்டியடித்தனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது.