மதுரை வண்டியூரை சேர்ந்த மூதாட்டி லெட்சுமி. இவரது கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிழந்துள்ளார். இவருக்கு கேசவன், முருகவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மூதாட்டி லெட்சுமி தனக்கு சொந்தமான வீட்டை விற்று இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். மேலும், தனது வங்கி கணக்கில் இரண்டு லட்சம் ரூபாய் வைத்துள்ளார். இதனை, மூதாட்டி லெட்சுமியின் வங்கி கணக்கில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மகன்கள் ஏடிஎம் மூலமாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரிடம் இருந்த 10 சவரன் நகையையும் வாங்கி கொண்டதாக மூதாட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.