கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையை சேர்ந்த கிருஷ்ண நாயர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு, முதற்கட்டமாக ஜூலை 5 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடக்கிறது. நான் நீட் தேர்வில் 320 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும் நான் பொதுப்பிரிவில் (OC பிரிவு) வரும் நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் மத்திய அரசின் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கலந்தாய்விற்காக விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றவில்லை என தெரியவந்தது.