மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கிவருகிறது. இதில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மதுரையைச் சேர்ந்த 153 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் என 157 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது அதிக அளவாகும்.