தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எப்படி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்!’ - சோளக்கொல்லையாய் மாறிப்போன கீழடி அகழாய்வுக் களம் - keezhadi archaeological materials

மதுரை: சென்ற ஆண்டு மிகவும் பரபரப்பாகக் காணப்பட்ட கீழடி தொல்லியல் அகழாய்வுக் களம் தற்போது சோளக்கொல்லையாய் மாறி காட்சியளிக்கிறது.

keezhadi
keezhadi

By

Published : Jan 20, 2020, 2:33 PM IST

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் 2019ஆம் ஆண்டு 5ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்கள், தமிழின் பெருமையை உலகத்திற்கே பறைசாற்றியது. ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்களின் வருகையால் சுற்றுலாத் தலம்போல் இயங்கிய கீழடி தொல்லியல் அகழாய்வுக் களம் தற்போது, சோளக்கொல்லையாய் மாறிவிட்டது. இங்குள்ள தொல்லியல் மேடுகள் அனைத்தும் பட்டா நிலம் என்பதால், ஆய்வு செய்துவிட்டு தொல்லியல் துறை அவற்றை நில உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது.

சோளக்கொல்லையாய் மாறிப்போன கீழடி

நிலத்தில் உரிமையாளர்களில் ஒருவரான முனைவர் கரு.முருகேசன் என்பவர் தன்னுடைய நிலத்தில் உறைகிணறும், வாய்க்கால் போன்ற அமைப்பும் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், சோளப்பயிறை விதைத்திருந்தார். அது வளர்ந்து பெரிதாகி சோளக்கொல்லையாய் மாறி காட்சியளிக்கிறது.

திரைப்படம் ஒன்றில் நடிகர் விவேக் கூறுவதைப் போன்று, 'எப்பிடி இருந்த நான்... இப்பிடி ஆயிட்டேன்' என்பதுபோல், கீழடி தொல்லியல் ஆய்வுக் களம் தற்போது சோளக்கொல்லையாய் மாறிவிட்டது. ஆனாலும், நாள்தோறும் குறைந்தபட்சம் 50 பேராவது இந்த இடத்தை இப்போதும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: இலக்கிய சந்தேகங்களை தீர்க்கும் இடம் கீழடி -உதயசந்திரன் ஐஏஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details