தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பூந்தொட்டிகள் விற்பனை அறிமுகம்! - Flowerpot made by madurai Central jail inmates

மதுரை: மத்திய சிறையிலிருக்கும் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை சிறைத் துறை துணைத் தலைவர் இன்று தொடங்கிவைத்தார்.

Introduce the sale of Flowerpot made by inmates to the madurai Central jail
Introduce the sale of Flowerpot made by inmates to the madurai Central jail

By

Published : Dec 11, 2019, 5:17 PM IST

மதுரை மத்திய சிறையில் 500-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில்கொண்டு சிறைத் துறை நிர்வாகம் சார்பில் சிறுதொழில், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பலவகை தொழில்களை செய்வதற்கு சிறைக்குள்ளேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையைத் தொடங்கிவைத்த சிறைத் துறை துணைத் தலைவர்

அதன் ஒருபகுதியாக, சிறையில் தண்டனை பெற்றுள்ள கைதிகளைக் கொண்டு சிமெண்ட் தொட்டிகள் செய்யும் பணி தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மதுரை மத்திய சிறைத் துறை துணைத் தலைவர் பழனி இன்று தொடங்கிவைத்தார்.

இதன்மூலம் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டிகளைப் பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கிச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சம்பளமின்றி திகார் சிறையில் தூக்கிலிடும் பணிக்கு காவலர் விண்ணப்பம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details