சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே ஐந்து எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அதே குழியில் மேலும் கூடுதலாக ஒரு மனித எலும்புக்கூடு நேற்று (ஆக.12) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 183 செ.மீ உயரமும் 35 செ.மீ அகலமும் கொண்டதாகும்.
கண்டறியப்பட்டுள்ள அனைத்து எலும்புக்கூடுகளும் முழுமையான மூலக்கூறு ஆய்வுகளுக்குப் பிறகு அதன் காலமும், ஆணா பெண்ணா என்பது குறித்து முழுமையான விவரங்களும் தெரியவரும் என தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் கூறியுள்ளார்.