திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியைச் சேர்ந்த நித்தியானந்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் " 2015ஆம் ஆண்டு திண்டுக்கல் PSNA கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பு (Electronics and communication) பொறியியல் பிரிவில் சேர்ந்தேன். 2019ஆம் ஆண்டு படிப்பை முடித்த நிலையில் 14 படங்களில் அரியர் இருந்தது.
தற்போது அரியர் தேர்வுகளை எழுத தமிழ்நாடு அரசு அனுமதித்திருந்த நிலையில், கடந்த மே 23ஆம் தேதி 14 பாடங்களுக்கும் சேர்த்து 2 ஆயிரத்து 100 ரூபாயை கட்டணமாக செலுத்தினேன். ஆனால், தேர்வெழுதும் மாணவர்களுக்கான மின்னஞ்சல் எனக்கு அனுப்பப்படவில்லை. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினை அணுகியும் எவ்விதமான நம்பத்தகுந்த தகவலும் வழங்கப்படவில்லை.