கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கோயில்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள கோயில்களையும் திறக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாசலில் தேங்காய்களை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய அந்தக் குழுவின் மாநிலச் செயலாளர், "பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மதுக்கடைகளைத் திறந்த மாநில அரசு, மூடப்பட்டுள்ள மூன்று லட்சம் கோயில்களையும் திறக்க வேண்டும். அனைத்து முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகத் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.