மதுரை சிவானந்தா சாலையைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது கணவர் சரவணனுக்கும் அவரது சகோதரருக்கும் தொழிலில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதில், அவரின் சகோதரர் என்னை மிரட்டி எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நான் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தேன். இந்த புகார் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், என் கணவரின் சகோதரரின் புகாரின் பேரில் திலகர் திடல் காவல் துறையினர் கடந்த ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணியளவில் என்னைக் கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் சென்றனர்.