மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதற்காகப் பொதுமக்களிடம் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அந்த வகையில் மதுரையில் 100 வார்டுகளில் ரத யாத்திரை வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதி கோரி உதவி காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தோம். அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால் அந்த உத்தரவை காவல் துறையினர் நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.