மதுரை ஆதீன மட மேலாளர், ஆதீன மேலாளர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாரவர்மனால் மதுரை ஆதீன மடத்திற்கு பல ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தற்போது பலர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஆதீன மடத்திற்கு எந்த வருவாயும் இல்லை.
எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்றி மடத்திற்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளித்தோம். சம்பந்தப்பட்ட நிலத்தை 15 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. அதே நேரம் அறநிலையத் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.