தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கட்டணம் வழக்கு: தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்றம் - High Court has dismissed a case seeking an order to place information

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டணம் குறித்த தகவல் பலகையை வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் விவகாரம்
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் விவகாரம்

By

Published : Dec 6, 2021, 4:29 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டணம் குறித்த தகவல் பலகையை வைக்க உத்தரவிடக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரே மருத்துவத்திற்குப் பலவகையான கட்டணங்களை வசூலிக்கின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவத்தில் "சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இருவழி பிரசவங்களுக்குமே அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பெரும் அளவில் கட்டணம் வசூலிப்பு

அறுவை சிகிச்சை எனில் இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின்னரும் தாயும், சேயும் மருத்துவமனையில் மூன்று முதல் ஐந்து நாள்கள் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறி, அறைக் கட்டணம், பரிசோதனைக்கான செலவுகள் எனப் பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மருத்துவக் கட்டணம் விவகாரம்

மருத்துவக் கட்டணம் குறித்த தகவல் பலகை

விதிக்கப்படும் கட்டணமும் இன்னொரு மருத்துவமனை கட்டணத்திலிருந்து மாறுபட்டதாக உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளிலும் தங்களது மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகையை வைப்பது தொடர்பான விதியை முறையாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு கிடையாது - மா. சுப்பிரமணியன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details