மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாக்குபெற்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அரசியல் கட்சிகள் மீது தேர்தல் அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டது.
மேலும், தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சு. வெங்கடேசன் அவருக்கு உடந்தையாக சில சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தி, அவர்கள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.