தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கக் கோரிக்கை’

மதுரை: திசையன்விளையில் இருந்து கூடுதலாக அரசு விரைவு பேருந்துகளை சென்னை,கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில் நெல்லை மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

By

Published : Jan 21, 2020, 7:02 PM IST

’கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கக் கோரிக்கை’
’கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கக் கோரிக்கை’

நெல்லை மாவட்டம் கூனியூரை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து நாள்தோறும் 42 ஆம்னி பேருந்துகள் சென்னை,கோவை உள்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால் திசையன்விளையில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு 3 அரசு விரைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மேலும் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தனியார் பேருந்துகள் புறப்படுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் அரசு பேருந்தை இயக்க வேண்டும் என்பது விதி .இந்த விதியை கடைப்பிடிப்பதில்லை. இதை தவிர்க்க திசையன்விளையில் இருந்து கூடுதலாக தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளை சென்னை , கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் .

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து, நெல்லை மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details