தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'10 நாளுக்கு முன்னாடி தான் எங்களைப் பார்த்துட்டு போனான்...' வீரமரணம் அடைந்த லட்சுமணனின் தாய் வேதனை! - வீரமரணம் அடைந்த லட்சுமணன்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதி வீரமரணம் அடைந்த லட்சுமணன் 10 நாட்களுக்கு முன்பு தான் தாய் தந்தையரை பார்த்து விட்டுப் பணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது; அவரது மரணம் தும்மக்குண்டு சுற்றுவட்டார மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீரமரணம் அடைந்த லட்சுமணின் தாய் வேதனை
வீரமரணம் அடைந்த லட்சுமணின் தாய் வேதனை

By

Published : Aug 11, 2022, 10:59 PM IST

மதுரை:உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு புதுப்பட்டியைச்சேர்ந்த தர்மராஜ் மற்றும் ஆண்டாள் தம்பதியின் மகன்கள் தான், இரட்டையர்களான ராம் மற்றும் லட்சுமணன். இதில் லட்சுமணன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றவர்.

4 ஆண்டுகளாக ராணுவத்தில் பணி செய்து வந்த லட்சுமணன், இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வீரமரணம் அடைந்தார். லட்சுமணனின் இறப்பு செய்தியைக்கேட்டு தும்மக்குண்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தனது மகன் நாட்டுக்காக இன்னுயிரை துறந்தது பெருமை அளித்தாலும், இழப்பைத் தாங்க முடியவில்லை என தந்தை தர்மராஜ் வேதனைபடக்கூறியுள்ளார்.

உடன்பிறந்த சகோதரர் ராம் கூறுகையில், 'தாயாரை ஆறுதல் சொல்லி தேற்ற முடியவில்லை' என்றார்.

கடந்த ஜூலை 23ஆம் தேதி தாய், தந்தையரை பார்ப்பதற்காக வந்திருந்த லட்சுமணன் 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்குத் திரும்பி இருக்கிறார். ’10 நாளுக்கு முன்னாடி தான் எங்களைப் பார்த்துட்டு போனான்...' என வீரமரணம் அடைந்த லட்சுமணனின் தாய் கண்ணீர் மல்க உறவினர்களிடம் தெரிவித்தது, காண்போரை கலங்கச் செய்தது.

லட்சுமணனின் உடல் விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு; ராணுவ மரியாதையோடு நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details