ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு குரூப் 1 தேர்வில் முன்னுரிமை கோரிய வழக்கு: தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு - மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழ் வழியில் முழு நேர வகுப்பில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளில் முன்னுரிமை வழங்கக் கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தேர்வுகளில் முன்னுரிமை  மதுரை உயர் நீதிமன்றம்  hc order to ans upon tnpsc group 1 exam
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Feb 4, 2020, 7:29 AM IST

திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நான் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் பட்டங்களை எஸ்.வி.என் கல்லூரி மற்றும் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும், சட்டப்படிப்பினை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகள் முழுநேர வகுப்பில் பயின்றுள்ளேன்.

நான், தற்போது, டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வில் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆனால், முதன்மை தேர்வுக்கான அழைப்பாணை எனக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, தபால் வழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு விதிகளை மீறி அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால், என்னைப்போன்று தமிழ் வழியில் முழுநேர வகுப்பில் படித்து தேர்வானவர்களுக்கு பிரதானத் தேர்வுகளில் முன்னுரிமை வழங்க உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: காணாமல் போன மாடுகள்: மீட்பதற்கு ஆட்சியரிடம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details