தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சத்தியநாராயணன் அமர்வு விசாரிக்க உத்தரவு - சொத்துக் குவிப்பு வழக்கு

மதுரை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட, பதிவாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

rajendra balaji

By

Published : Sep 25, 2019, 9:27 PM IST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996ஆம் ஆண்டில் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழ்நாடு பொதுத்துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், விசாரணையின் அடிப்படையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர் ..

இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த வழக்கு தொடர்பாக கடந்த அமர்வில் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராணன், புகழேந்தி அமர்வு நிறைய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

ABOUT THE AUTHOR

...view details