உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாமாக முன்வந்து மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், “கரூர் மாவட்டத்தில் சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்தக் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைகிறது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் தூரம் திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது.
மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர்.
இதை அரசு அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை, இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.