தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கால அவகாசம் - H Raja case

மதுரை: உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இரண்டு மாத கால அவகாசம் வழங்கி மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கால அவகாசம் வழங்கி உத்தரவு!
உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கால அவகாசம் வழங்கி உத்தரவு!

By

Published : Jul 23, 2020, 4:56 PM IST

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காவல் துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இதில் விரைவில் ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும், மூன்று மாத கால அவகாசம் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிந்துவிட்ட நிலையில், கரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் கால தாமதம் ஆகிறது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், மூன்று மாத கால அவகாசம் வழங்க இயலாது எனக்கூறி இரண்டு மாத கால அவகாசம் வழங்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details