தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய அளவில் டிரெண்டாகும் 'நந்தினியை விடுதலை செய்' ஹேஷ்டேக்! - டிரெண்ட்

மதுரை: மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்கறிஞர் நந்தினி, நீதிமன்ற அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரும் 'நந்தினியை விடுதலை செய்' எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

நந்தினி

By

Published : Jun 29, 2019, 9:34 PM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, தனது தந்தையுடன் இணைந்து மது ஒழிப்பு, ஹைட்ரோகார்பன் திட்டம், ஸ்டெர்லைட், நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக துணிச்சலாகப் போராடி வருகிறார். இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின்போது அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது போதைப் பொருளா, உணவுப் பொருளா, மருந்துப் பொருளா என்றும், இந்திய குற்றவியல் சட்டம் 328படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குற்றமில்லையா..? என்று நந்தினி வாதிட்டார்.

நந்தினியின் திருமண அழைப்பிதழ்

இதனையடுத்து நீதிமன்றத்தை அவதூறு செய்த குற்றத்துக்காக நந்தினியை வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூலை 5ஆம் தேதி நந்தினிக்கும் குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'நந்தினியை விடுதலை செய்' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details