தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - போலீசார் பலத்த பாதுகாப்பு

மேலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் உடல் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

By

Published : Mar 7, 2022, 10:57 PM IST

மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - போலீசார் பலத்த பாதுகாப்பு
மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - போலீசார் பலத்த பாதுகாப்பு

மதுரை:மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகூர் ஹனிபா என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்களான பிரகாஷ் பெருமாள், கிருஷ்ணன், சாகுல் ஹமீது, நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா, அவரது தந்தை சுல்தான் அலாவுதீன், சகோதரர் ராஜாமுகமது ஆகிய 8 பேரை போலீசார் கொலை, கடத்தல், போக்சோ உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உயிரிழந்த சிறுமியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று வருவாய் கோட்டாட்சியர் முன்பு உடற்கூராய்வு செய்யப்பட்டது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் உடலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை பல கட்டமாக நடைபெற்றது.

இதனை வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடல் சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த பிரச்னையில் இந்து அமைப்புகள் தலையிட்டதால் காவல் துறையினர் மருத்துவமனை முன்பாக குவிக்கப்பட்டனர். சிறுமியின் உடல் அடக்கம் நடைபெறும் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரை சிறுமி உயிரிழந்த விவகாரம்: எஸ்பி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details