மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஊர்சேரி பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் தமிழ்வளவன். இவர் பிறக்கும்போதே கண்பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். தமிழ்வளவன் பிஏ பட்டப்படிப்பு வரை படித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்காக ஒதுக்கப்பட்ட ஊர்சேரி கிராமத்தில் காலியாக இருந்த ஊராட்சி செயலர் பணிக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். பின்னர், பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற செயலர் பணிக்கான நேர்முகத் தேர்விலும் பங்கேற்று தகுதியும் பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு ஊராட்சிகளில், ஐந்து ஊராட்சிகளில் செயலர் பணிக்கான நபர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஊர்சேரி ஊராட்சியில் மட்டும் செயலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னை அந்தப் பணியில் நியமிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.