மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறை, டயாலிசிஸ் முறை என இரண்டு முறைகள் உள்ளன. அதில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அதிக செலவுடையதாக இருப்பதால், ஏழை நோயாளிகள் பெரும்பாலும் டயாலிசிஸ் முறையையே பின்பற்றுகின்றனர்.
இதற்கிடையே தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழியங்கும் மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் நுட்பனர்கள் இருவரும், டயாலிசிஸ் தொழில்நுட்பப் படிப்பில் பட்டயப் படிப்பு பயின்றவர்கள் ஐந்து பேரும் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்ததன்படி, இரண்டு மூன்று டயாலிசிஸ் கருவிகளுக்கு நன்கு பயிற்சிபெற்ற நுட்பனர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைமுறையில் இல்லை என்பதால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் செவிலியரும், டயாலிசிஸ் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களே டயாலிசிஸ் இயந்திரங்களை கையாளுகின்றனர்.