மதுரை மாவட்டம் சிலைமான் எல்.கே.டி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள். இவருக்கு கணவர், குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில் அப்பகுதியில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே உறவினரான அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றும் டைட்டஸ் என்பவருக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையைப் பார்ப்பதற்காக மூதாட்டி செல்லமாளை இவர் அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் மதுபோதையில் இன்று (ஆகஸ்ட் 15) மூதாட்டியை கழுத்தை நெரித்து டைட்டஸ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.