மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகேவுள்ள அய்யன் பாப்பாக்குடி கண்மாய்க்கு இன்று (மே 4) மதியம் இரண்டு சிறுவர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனையறிந்த அவர்களது பெற்றோர், உறவினர்கள் சிறுவர்களைக் கண்மாயிக்குள் இறங்கித் தேட தொடங்கினர். உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.