தமிழ்நாடு

tamil nadu

மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் பத்திரமாக மீட்பு!

மதுரை: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினரின் விரைவு நடவடிக்கை மூலம் நோயாளிகள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டனர்.

By

Published : Dec 20, 2019, 7:56 PM IST

Published : Dec 20, 2019, 7:56 PM IST

fire-accident-in-madurai-private-hospital-patients-has-been-rescued-safely
மருத்துவமனையில் தீ விபத்து

மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையின் நான்காவது தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டதால் நான்காவது தளத்திலிருந்த நோயாளிகள் உடனடியாகத் தரைத்தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

இதையும் படியுங்க:டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலையில் தஞ்சம் !

ABOUT THE AUTHOR

...view details