மதுரை மாநகர் சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் மென்பொருள் பொறியாளராக மட்டுமன்றி டேக்வாண்டோ எனும் தற்காப்புக் கலையின் மீது அதிக ஈடுபாடும் கொண்டவர்.
சாதனைகள் படைப்பதில் ஆர்வம் கொண்ட இவர், இன்று (ஜூலை25) ஒரு நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை தனது கால்களால் உடைத்து சாதனை படைத்துள்ளார். நாராயணனின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மோடிக்கு வெற்றியை அர்ப்பணித்த நாராயணன்