தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று

மதுரை: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் உள்பட எட்டு பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

By

Published : May 28, 2020, 9:17 AM IST

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கிவருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் அங்கு இதுவரை 233 பேர் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இச்சூழலில், நேற்று புதிதாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் உள்பட எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை 140 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, தற்போது மொத்தம் 99 பேர் இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மதுரையில், நேற்று புதிதாக எட்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 241ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க :ஏலக்காய் ஏலம் நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details