தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2020, 6:03 PM IST

ETV Bharat / state

ஊரடங்கால் உருக்குலைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திமுக மனு!

மதுரை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மேம்பாட்டிற்கு நிவாரணம் வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.

திமுக
திமுக

கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், திமுக சார்பில் ’ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின் மூலமாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊரடங்கால் உருக்குலைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திமுக மனு

இதுகுறித்து திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ தளபதி, “மதுரை மாவட்டத்தில் ’ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பயன்பெற 30 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. திமுக சார்பில் 10 ஆயிரம் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 20 ஆயிரம் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும்” என்றார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாநகர் திமுக சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனுடன், உதவி கோரிய 20 ஆயிரம் மக்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலும் இணைக்கப்பட்டது.

இதையும் படிங்க: குளு குளு காற்று....கொட்டி தீர்த்த மழை: குதூகலத்தில் விழுப்புரம் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details