மதுரை:கரூர் தாந்தோணியைச் சேர்ந்த குமார் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் சர்வே எண் 1954/1Bஇல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 40 அடி பொது சாலை அமைந்துள்ளது.
இந்த பொது சாலையை ஆக்கிரமித்து ராஜா என்ற தனி நபர் அனுமதியின்றி கட்டடம் கட்டி வருகிறார். எனவே 40 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருவதை நிறுத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (டிச.16) உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.