தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2020, 11:43 PM IST

ETV Bharat / state

ஊரடங்குத் தளர்வு: அலட்சியம் காட்டும் மதுரை மக்கள்!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியரால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதில் பொதுமக்களின் அலட்சியமும், தகுந்த இடைவெளி குறித்த அக்கறையின்மையுமே வெளிப்படுகிறது.

அலட்சியம் காட்டும் பொதுமக்கள்
அலட்சியம் காட்டும் பொதுமக்கள்

மதுரையில் இன்றிலிருந்து(ஜூலை 15) தீவிர ஊரடங்கு தளர்த்தப்பட்டு, வழக்கம் போல் காலை 6 மணி தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்துவிதமான கடைகளும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்று(ஜூலை 15) காலை 6 மணி முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. ஆனாலும், பொதுமக்களைப் பொறுத்தவரை தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதில் இன்னும் தொய்வு நிலையே நிலவுகிறது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை, மதுரையில் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமாக விழிப்புணர்வு பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தியும்; முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றைத் தொடர்ந்து நகர் முழுவதும் வலியுறுத்தியும் வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details