தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை அடைப்பு: இரு பிரிவினரிடையே மோதல் சூழல் - The path to the crematorium blocked

மதுரை: பட்டியலினத்தவருக்கான சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மற்றொரு பிரிவினர் முள்வேலியிட்டு மறித்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை அடைப்பு
சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை அடைப்பு

By

Published : Jun 11, 2021, 12:20 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா நடுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (41). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் (ஜூன் 9) இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் அவரது உடலை பட்டியினத்தோருக்கான சுடுகாட்டிற்கு மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாகக் கொண்டுசெல்ல குறிப்பிட்ட பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்துடன் அந்தப் பகுதியில் முள் வேலியால் அடைத்து பாதையை மறித்தனர்.

இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை உடலைக் கொண்டுசெல்லாமல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருமங்கலம் ஆர்டிஓ அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து பட்டியலினத்தோருக்காக தனிவழி ஏற்படுத்துவதாகப் பேச்சுவார்த்தையில் முடிவுசெய்தனர். ஆனால் பட்டியலினத்தவர், 'அந்த வழியில் செல்ல மாட்டோம், வழக்கம்போல் செல்லும் வழியில்தான் செல்வோம்' எனக் கூறிவருகின்றனர்.

இதனால் ஜேசிபி வாகனம் கொண்டு அந்த வழியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதே வழியில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details