தமிழ்நாடு

tamil nadu

நகைப்பெட்டியில் வெங்காயமும் உருளைக் கிழங்கும்: ஜனநாயக மாதர் சங்கத்தின் நூதன ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 3, 2020, 10:38 PM IST

வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை செல்லூர் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

aidwa protest against increase onion price
வெங்காய விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் நூதன ஆர்ப்பாட்டம்

மதுரை: வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்வைக் கண்டித்து இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் செல்லூர் தாகூர் நகர் பகுதியில், நகைகள் வைக்கும் பெட்டியில் வெங்காயம், உருளைக்கிழங்கை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் சசிகலா, போராட்டம் குறித்து பேசுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் இதுபோன்ற அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா. பழனியம்மாள், பகுதிக் குழுச் செயலாளர் சித்ரா, பகுதிக் குழு நிர்வாகிகள் மைதிலி, சுப்புலட்சுமி, ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:விண்ணைப் பிளக்கும் வெங்காய விலை

ABOUT THE AUTHOR

...view details